Sunday, March 25, 2007

நாடிவந்த செல்வம் தன்னை




















முன்பெல்லாம் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான இந்தப்பாடல் இப்பொழுது எங்கும் கேட்க முடியவில்லை. தனித்திரட்டுகளிலோ சி.டி.வடிவிலோ இருப்பதாகவும் தெரியவில்லை.
இளையராஜாவின் குரலில் இனிமை சேர்க்கும் இந்தப்பாடல். பலமுறை கேட்டும், பாடியும் இருப்பதால் முழுவதுமாக நினைவில் இருக்கிறது
இந்தப்பாடல்.


நாடிவந்த செல்வம்தன்னை ஏழைகட்கு நீ கொடுத்து
நாட்கள் முற்றும் பாடு கண்ணனை
நல்லவர்கள் சொற்சரத்தில் உள்ளம் முற்றுமே இணைத்து
நாளும் பாடு கீதை வர்ணனை
நாளும் பாடு கீதை வர்ணனை!
(நாடி வந்த)

தேடி ஓடு ஈசன் பாதம் ஓது ஓது தேவ வேதம்
செய்கை என்றும் தெய்வ சிந்தனை
சிறிது மட்டும் சொன்னதுண்டு அதிகம் சொல்லத் தேவையில்லை
தீமையாகும் தெய்வ நிந்தனை!
(நாடி வந்த)

கோடி கோடி வந்த போதும் நோய் நொடிக்கு நீ இலக்கு
கூடுவாய் அத்தேவன் பாதமே
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில் கீதை சொன்ன
கோகுலனைப் பாடு உள்ளமே!


(நாடி வந்த)

ஜனனி ஜனனி...






படம் :தாய் மூகாம்பிகை
குரல் :இளையராஜா
இசை :இளையராஜா



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ.. (3)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..



ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..

சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..

நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)

ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ..


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..

ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)

அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..

தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)

அலை மாமகளே கலை மாமகளே.. (3)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ..



ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..

பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)

சக்தி பீடமும் நீ.. ஆ...

சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ.. (2)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)